இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத முகாம்களை தகர்த்த விமானப்படைக்கு வாழ்த்து கூறியுள்ள பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார், இனியும் அமைதி காக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தகர்த்துவிட்டு பாதுகாப்பாக திரும்பிய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ராணுவ வீரர்களை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று காயத்ரி ரகுராம், சமந்தா, செளந்தர்யா ரஜினிகாந்த், வைரமுத்து போன்றோரும் இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version