கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தோன்றிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு  ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த கோலி காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களிடம் சிறிது நேரம்  உரையாடினார். பின்னர் அவர்களுக்கான பரிசுகளை கொண்டு வந்த கோலி தன்னுடைய வேடத்தைக் கலைத்த போது குழந்தைகள் கரவொலி எழுப்பினார்கள்.
இதையடுத்து, தனது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை விராட் கோலி கலைத்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும்ஆரவாரம் செய்தனர்.பின்னர் அந்த குழந்தைகளுடன் இணைந்து கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கோலி ஆதரவற்ற குழந்தைகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Exit mobile version