கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்க தயாராகும் 6 டன் எடையுள்ள கேக்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிவகாசியில் தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 6 டன் எடையுள்ள பிரமாண்ட கேக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் இந்த மாதம் 25 ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. அதேபோல அடுத்த மாதம் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிவகாசியில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் 6 டன் அளவிலான பிரமாண்டமான கேக் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கேட்டரிங் கல்லூரி மாணவ, மாணவிகள், 600 கிலோ எடை கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள உலர் திராட்சை, முந்திரி, பேரிச்சம்பழம் செர்ரிபழம், டூட்டி புரூட்டி, ஆரஞ்சு மற்றும் இஞ்சி, வெளிநாட்டு மதுபானங்களை ஊற்றி சுகாதாரமான முறையில் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Exit mobile version