ஓய்வு பெறுகிறார் "சிக்ஸர் மன்னன்" கிறிஸ் கெய்ல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடவுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 49 அரைசதம், 23 சதம் உட்பட 9,727 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version