பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் விழா தொடக்கம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை திருநாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருநாள் விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கடந்தாண்டு கொரோனா பரவலால் திருவிழா ரத்தான நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 14-ம் தேதி சித்திரை திருநாளன்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

Exit mobile version