மதுரை அருகே கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழா

மதுரை அருகே வைகாசிபட்டி கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விவசாய விளை பொருட்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டத்தில், வைகாசிபட்டி என்னும் கிராமத்தில் பழமையான கல்லுமலை கந்தன் ஆலயத்தில், சித்திரை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, வைகாசிபட்டி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, ஏராளமான விவசாயிகள், தங்கள் நிலங்களில் வேளாண்மை பெருக கந்தனை வேண்டிக் கொள்வதும், வேண்டியது பலித்ததும், மாங்காய், பப்பாளி போன்ற விளை பொருட்களை சமர்ப்பித்து வழிபடுவதையும் காணமுடிந்தது.

Exit mobile version