கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ள சின்னதம்பி யானையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கடந்த ஆறு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சின்னத்தம்பி யானை பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வரும் சின்ன தம்பி யானை மிகுந்த சோர்வுடன் காணப்படுவதால் கரும்பு தோட்டத்திற்குள் சென்று ஓய்வு எடுக்கிறது. யானையை வனப்பகுதி அல்லது முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version