சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய சின்மயி..!

ரவிவர்மன் ஓவியத்திற்கு உயிர் கொடுத்த சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த பாடகி சின்மயி ஆச்சரியத்தில் மூழ்கி இணையதளத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

 “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சமந்தா அறிமுகமானவர் .. இதனை தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய தனித்தன்மை நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் கனவுக்கன்னியாக சமந்தா வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில், காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் ஓவியர் ரவி வர்மாவின் ஓவியங்களை தமிழ் நடிகைகளை வைத்து டிட்டோ செய்து வருகிரார்கள்.

அந்த வகையில், நடிகை சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதிஹாசன், குஷ்பு , நதியா உள்ளிட்ட பிரபல நடிகைகள் அப்படியான ஓவியங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்கள். இதில், நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாடகி சின்மயி ஓ.. மை. காட்.. என கம்பன் செய்து ஆச்சரியத்தில் மூழ்கி போயுள்ளார்.

Exit mobile version