சீன அதிபர் சந்திப்பிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்த முதலமைச்சருக்குப் பிரதமர் பாராட்டு

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததற்காகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு ஆகியவை நமது பண்பாட்டையும், மரபையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாடு தனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். உச்சி மாநாட்டுக்குச் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த தமிழ்நாட்டு மக்களுக்கும், கலாச்சார, சமூக, அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version