சீன அதிபர் தமிழகத்திற்கு வருகை: சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளில் சீன பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், வரும் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங் பிங் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவைகளை ஆய்வு செய்ய பல அதிகாரிகளும் அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தனர்.

Exit mobile version