சீன அதிபரின் முகம் பதித்த பொன்னாடை : அசந்து போன ஜின்பிங்

 சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வருகை தந்திருப்பது தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய சிற்பங்களை இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இணைந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளையும் ரசித்திருக்கிறார்கள் .தமிழகம் வந்து இருக்கும் சீன அதிபருக்கு தமிழக உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இன்று மீண்டும் பாரதப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்குப் பிறகு தற்பொழுது கோவளத்தில் தமிழக கலை படைப்புகளை பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் பார்வையிட்டு கொண்டிருக்கின்றனர் .இதில் தமிழக பட்டுச்சேலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவம் பொறிக்கப்பட்டு அவருக்கு காண்பிக்கப்பட்டது. தன்னுடைய உருவத்தை பட்டு சேலையில் பார்த்த சீன அதிபர் ஜின்பிங் அசந்து போய் அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளை பாராட்டினார்

Exit mobile version