ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் சுமார் 100 பேர் பிப்ரவரி 1-ந் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா!

ஜி20 தொடக்க நிலை மாநாடு, நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் உள்ள நடசத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டு ரசிக்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களை பார்வையிட பிப்ரவரி 1ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version