தந்தை குறட்டை விடும் சத்தம் தாங்க முடியாமல் கடுப்பாகிய குழந்தை செய்த காரியத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..
பொதுவாக உறங்கும் போது ஆண் , பெண் இருவருமே குறட்டை விடுவார்கள் ..இவ்வாறு இரவில் அருகில் யாராவது குறட்டை விடும் சத்தம் கேட்டால் அவருக்கு தூக்கமே வராது.. இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது தந்தை குறட்டை சத்தம் தாங்க முடியாமல் குழந்தை செய்யும் காரியம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது..
அதில் குழந்தை தான் காலில் அணிந்திருக்கும் சாக்ஸை எடுத்து தந்தையின் வாயில் திணித்து, எழுப்பியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் குறட்டை விட்டதால் மனைவி தனது கணவனுக்கு விவாகரத்து கொடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறட்டை விடும் அப்பாகள் கண்டிப்பாக பார்க்கவும்?????? pic.twitter.com/3os2gwMfOm
— சோலை ராஜா (@solai_ra_ja) January 22, 2020