கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் பெற்றோரை அல்லது பராமரிப்பாளரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க பிரதமரின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் போது மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு 23 வயது ஆகும் போது 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version