சிறுவனை கொலை வழக்கு-22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

9 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 9 வயது மகன் கிஷோர் கடந்த 2017ஆம் ஆண்டு காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் அரவிந்த் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்திய போது, சிறுவன் கிஷோரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு மீதான விசாரணை மாவட்ட கூடுதல் மற்றம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட அரவிந்திற்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

Exit mobile version