கோவை அருகே குழந்தை கொல்லப்பட்ட வழக்கு: தாயை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு

கோவை அருகே குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட தாயை ஜூன் 12 ம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க கோவை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் 3 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை கொன்றதாக அக்குழந்தையின் தாய் ரூபிணியை கைது செய்தனர்.
ரூபிணிக்கும் தமிழ்செல்வன் என்பவருக்கும் ஏற்பட்ட தொடர்பால் குழந்தைக்கு பாலில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரூபிணியை கைது செய்த போலீசார் தமிழ் செல்வனை தேடி வருகின்றனர் . இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் ரூபிணியை வருகின்ற ஜூன் 12 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version