கல்குவாரி குட்டையில் மூழ்கிய சிறுவன், சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல்  அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிக்கு  குளிக்கச் சென்ற  சிறுவன், சிறுமியும்  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பண்ணியாமலையில் உள்ள 50 அடி ஆழ  கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக  சென்ற சிறுவனும் சிறுமியும்,  ஆழமான பகுதியை அறியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து, உடன் குளித்துக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள்  தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து சென்ற கிராம மக்கள் சிறுமியின் சடலத்தை மீட்டனர். ஆனால், சிறுவனின் உடலைக் கண்டுபிடிக்க முடியாததால்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  பல மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுவனின் உடலை கல்குவாரி குட்டையில் இருந்து மீட்டனர்.  பின்னர், இருவரின் உடல்களும்  நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version