கிருஷ்ணகிரியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஓசூரை அடுத்த சின்ன எலசகிரியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்,11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி விரைவு நீதிமன்றம், பாஸ்கருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்தது. அதேபோல், தாயம்மாபுதூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் முன்பகை காரணமாக ஜெய்சங்கர் என்பவரை வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் அன்பழகனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version