பாஜக வேட்பாளர் எச்.ராஜா ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பேருந்துநிலையம் அருகே சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, மானாமதுரை பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜன் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். மக்களின் எண்ணங்களை அறிந்து, நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். தொண்டனாக இருந்து உழைக்காமல், நேரடியாக தலைவர் பதவிக்கு வந்த ஸ்டாலினுக்கு அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என விமர்சனம் செய்தார்.

மானாமதுரையில் தேவர்சிலை அருகே பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கட்சிக்கும், ஆட்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்த நினைத்த சிலரின் சூழ்ச்சிகள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த சூழ்ச்சியாளர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

திருபுவனத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசிய வைகோ, தற்போது சந்தர்ப்பவாத கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். நேரத்திற்கு தகுந்தவாறு செயல்படும் ஸ்டாலினும், தற்போது அதேபாணியில் வைகோவும் சேர்ந்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்தார்.

Exit mobile version