'நிவர்' புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வரின் பயணம் நவ-27க்கு மாற்றம்!

நிவர் புயல் அறிவிப்பினால் முதலமைச்சரின் கொரோனா ஆய்வுப் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வரும் 25 ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நிவர் புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளதால், முதல்வரின் சுற்றுப்பயணம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி முற்பகலில் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகலில் அரியலூர் மாவட்டத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version