11-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு முதலமைச்சர் சுற்றுப் பயணம்!

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய, வரும் வெள்ளிக்கிழமை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வரும் 11ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பின் மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு, முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

 

Exit mobile version