வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூர்வீக பாசன இரண்டாம் பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதி கண்மாய்களுக்கும் பகுதி 1ல் உள்ள 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரும் 29 ம் தேதி முதல் 6 நாட்களுக்கு 184 கன அடி நீர்திறக்க உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையொன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version