சாத்தனூர் அணை திறக்க முதல்வர் உத்தரவு

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடும்படி, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அணையை திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல், திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாத்தனூர் அணை திறப்பால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version