தமிழக மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்!

ஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ஈரானில் சிக்கியிருந்த 681 தமிழக மீனவர்களும் கடந்த 1ம் தேதி ஜலஸ்வா கடற்படை கப்பல் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டதாகவும், அதற்காக நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கப்பலில் போதிய இடம் இல்லாததால் மேலும் 40 தமிழக மீனவர்கள் ஈரானில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை விமானம் மூலம் உடனடியாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version