முதல்வரின் தேர்தல் சூறாவளி பிரசாரம் : மக்கள் வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு அதிமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஒரே நாளில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று முதலமைச்சர் பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்தநிலையில், முதலமைச்சரின் தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு அதிமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version