காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Exit mobile version