"விடா முயற்சியை வளர்த்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்" ஜோதிஸ்ரீ துர்கா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக்கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள், இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version