மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை!

கொரோனா பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறித்து கேட்டறிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியர்கள் உடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு, காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Exit mobile version