முதல்வரின் 2ம் கட்ட பிரசாரத்தின் 5ஆம் நாள் பயண விவரம்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 2ம் கட்ட பிரசாரத்தின் 5ஆம் நாளான இன்று திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதல்வர், நாட்டின் பாதுகாப்புக்கு வலிமையான பிரதமர் தேவை என்றார். பிரதமர் மோடியின் ஆட்சியில் அண்மை நாடுகள் இந்தியாவை கண்டு அஞ்சும் நிலை இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். ஏரிகள் தூர்வாரும் பணிகளால், குடிநீர் சேமிக்கப்பட்டு வறட்சி காலங்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version