ஆம்புலன்ஸ் வந்ததால் பிரசாரத்தை நிறுத்திய முதலமைச்சர்

செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, மடத்துக்குளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்தார். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று கூறிய அவர், தமிழக மக்களின் நலன் காக்க நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும் என்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால், வாக்கு சேகரிப்பை நிறுத்திய முதல்வர் வழிவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால், ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக செல்ல முடிந்தது.

மடத்துக்குளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் பழனிசாமி, இவை தொடர அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Exit mobile version