"அம்மா படப்பிடிப்பு தளம் "அமைக்க நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை பெப்சி அமைப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தர வேண்டும் என பெப்சி அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதனை அம்மா அரங்கம் அமைக்க தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகே அம்மா படப்பிடிப்பு தளம் அமைக்க முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் வழங்கினார். தலைமை செயலகத்தில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அதற்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கி உள்ளார். அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version