காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிடுகிறார். பின்னர், கீழ்கதிர்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரத்தில் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Exit mobile version