நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய அமைச்சருடன் முதல்வர் இன்று ஆலோசனை!!

நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காவிரி – கோதாவரி இணைப்புத்திட்டம், குண்டாறு – வைகை இணைப்புத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தாமிரபரணி – கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்புத்திட்டம் 2021 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நதிநீர் இணைப்பு குறித்து காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், நீர் மேலாண்மைக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version