கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஆலோசனை நடத்துகிறார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் ஆட்சியர்களிடம் ஆலோசிக்கிறார். இதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

Exit mobile version