ஆசிரியர் தினத்தையொட்டி முதலமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்து

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கும் கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையை பெற்றவர்கள் ஆசிரியர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும், மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து, சிறந்த கல்வி பணியாற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்களை செம்மையான முறையில் பயன்படுத்தி, சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்கது என வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version