மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் நினைவூட்டல் கடிதம்

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக, பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே நவம்பர் 27 ம் தேதி மற்றும் டிசம்பர் 6 ம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதங்களில், மத்திய நீர்வள ஆணையம், மேகேதாட்டு அணை குறித்த திட்ட அறிக்கையை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டு என்று கோரப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்துள்ளார். மேலும், இந்த அனுமதி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கர்நாடகா சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ள நிலையில், முதலமைச்சர் நினைவூட்டல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

Exit mobile version