காங்கிரஸ் கட்சியினருக்கு முதலமைச்சர் பினராய் விஜயன் கேள்வி

பிரபலமானவர்களை தேர்தலில் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது காங்கிரஸ் கட்சியினரின் தவறான புரிதல் என கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் பினராய் விஜயன், வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெருவார் என்பது அக்கட்சியினரின் கனவாக மட்டும்தான் இருக்க முடியும் என விமர்சித்தார். அப்பகுதி மக்களின் நிலை மற்றும் தேவை அறிந்து இடது ஜனநாயக முன்னணி தனது சிறப்பான பணியை செய்து வருவதாக குறிப்பிட்ட அவர் பிரபலமானவர்களை தேர்தலில் நிறுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது காங்கிரஸ் கட்சியினரின் தவறான புரிதல் என அறிவுறுத்தினார்

Exit mobile version