மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு 50 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு நினைவிடம் அமைத்து வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நினைவிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார். முன்னதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, காமராஜ் உள்ளிட்டோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version