யுகாதி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த யுகாதி புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், மொழி, பாரம்பரியம், பண்பாட்டில் வேறுபட்டிருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக, தெலுங்கும் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாக, முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மலரும் புத்தாண்டு, அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலர வாழ்த்தியுள்ளதோடு,தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version