மருத்துவபடிப்பு இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் பழனிசாமி வரவேற்பு!

மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சமூக நீதி காத்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசு எடுத்த சட்டரீதியிலான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் OBC மாணவர்களின் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்று மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற தமிழக அரசுடன் துணை நின்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version