முதலமைச்சரை ஆரத்தி எடுத்து வரவேற்ற வெளிநாட்டு பெண்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாநகரம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை சென்னை கந்தன்சாவடியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

மாமல்லபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள வரும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வெளிநாட்டு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வெளிநாட்டு பெண்களின் இத்தகைய செயல் அங்கு கூடியிருந்த தொண்டர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version