கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் பழனிசாமி!

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, வரும் 15ம் தேதி முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் சென்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். மேலும், பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக வரும் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து 16ம் தேதி சேலம், 17ம் தேதி ஈரோடு ஆகிய மாவட்டங்களில், முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தும் அவர், பல்வேறு திட்டப் பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு திறந்து வைக்கிறார்.

Exit mobile version