ஈரோட்டில் ரூ.151கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை நாளை துவக்கி வைக்கும் முதல்வர் பழனிசாமி!

ஈரோடு மாவட்டத்தில் 151 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், 151 கோடியே 57 லட்சம் ரூபாயில் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஈரோடு செல்கிறார். இதற்கான முன்னெற்பாடுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுக்குடிநீர் திட்டம், சாலை விரிவாக்கம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட 14 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version