ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் இடம் ஒதுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 6 ஆயிரத்து 28 விண்ணப்பங்கள் இந்த ஆண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் மத்திய அரசு 3 ஆயிரத்து 736 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதை கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் ஒதுக்கீடு இடங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அந்த ஹஜ் பயண இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version