தீபாவளித் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

தீபாவளித் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளிப் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியுடன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

சுடர்விடும் தீபங்களின் ஒளிபோல, மக்கள் மனமெல்லாம் இனிமை பொங்கும் திருநாளாகவும், உள்ளத்தில் உள்ள இருள் விலகி புத்தொளி பிறக்கட்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீபாவளிப் திருநாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்றும், வளம் பெருகி, வாழ்வு சிறக்கட்டும் என்றும் வாழ்த்து கூறியுள்ள முதலமைச்சர், மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைக் கூறிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version