மனோகர் பாரிக்கர் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கோவா மாநிலத்தின் முதலமைச்சரும், சிறந்த அரசியல் தலைவருமான மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.கோவா மாநிலத்திற்கு பாஜகவிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி,

சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.மனோகர் பாரிக்கர் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பு என்று கூறியுள்ள முதலமைச்சர்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version