சேலம் மாவட்டம் எடப்பாடியில் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் முதலமைச்சர் பழனிசாமி வழிபாடு செய்தார். இதைதொடர்ந்து கஜா புயல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 30 டன் அரிசியை இரண்டு லாரிகள் மூலம் கொடியசைத்து அவர் அனுப்பி வைத்தார்.

பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து0 நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். எடப்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

 

 

 

 

Exit mobile version