மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதாநதி அணையில் இருந்து பாசத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளின் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மருதாநதி அணையில்இருந்து பாசனத்திற்கு நாளை முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால், 6 ஆயிரத்து 583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version