கோதையாறு பாசனத்திற்கு ஜுன் 8 முதல், 2021 பிப்ரவரி 28 வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து, 8 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்குமாறு, வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்திற்கு, ஜுன் 8 ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும், விவசாயப் பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version