முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிக உயரிய விருது கிடைத்ததற்காக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி, நாட்டுக்காக தன்னலம் கருதாமல் சேவை செய்துள்ளதை தனது வாழ்த்துச்செய்தியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராகவும் இந்திய நாட்டின் குடியரசு தலைவராகவும் அவர் திறம்பட செயலாற்றியதை முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். பாரத ரத்னா விருது பெறும் பிரணாப் முகர்ஜிக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் தனது சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version